6 மே, 2010

காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை : எ.ஊ.அமைப்பு கோரிக்கை



யுத்த காலத்தில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஊடகத்துறை அமைச்சராக நேற்றுப் பதவியேற்ற கெஹலிய ரம்புக்வெலவிடம் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

மேலும் கடந்த 100 நாட்களுக்கு மேல் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட மற்றும் கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் காணாமல் போன ஊடகவியலாளர் ருவான் வீரக்கோன் ஆகியோர் தொடர்பிலான விராணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரு ஊடகவியலாளர்கள் தொடர்பான எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக