5 மே, 2010

அணு ஆயுத அச்சுறுத்தல் விடுக்கும்’ நாடுகளை ஐ.நா தண்டிக்க வேண்டும்

அணு பரவலாக்காமை ஒப்பந்த மீளாய்வு கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபத
அணு ஆயுத பாவனை வெறுப்புக்கும் வெட்கத்துக்கும் உரியது. அவ்வாறான பாவனையை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தண்டிக்க வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

1970 ஆம் ஆண்டின் அணு ஆயுத பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டுள்ள 189 நாடுகளின் ஒப்பந்த மீளாய்வு சம்மேளன கூட்டம் ஒரு மாத காலத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறுகிறது.


அணு ஆயுத தடை ஒப்பந்தம் மீதான மாநாடு ஐ.நா.வில் நடைபெற்றபோது ஈரான் ஜனாதிபதி அஹமதி ரஜாத் உரையாற்றுகின்றார்.

இந்த கூட்டத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் உரையாற்றிய போதே ஈரானிய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அணு ஆயுதங்களை வைத்திருப்பது என்பது ஒன்றும் பெருமைக்குரிய விடய மல்ல. அவ்வாறான ஆயுதங்கள் சமாதான முறையிலான அணு வசதிகளுக்கு எதிராக பாவிக்கப்படும் என்ற அச்சுறுத்தலோ அல்லது அவ்வாறான தாக்குதலோ சர்வதேச சமாதானம் அல்லது பாதுகாப்பை மீறும் செயல் என கருதப்பட வேண்டும்.

அவ் வாறான தாக்குதலை மேற்கொள்ளும் நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துரித செயற்பாட்டின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இதர நாடுகளினால் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி சாடினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த கூட்டங்களின் போது மேற்குலக நாடுகள் அடிக்கடி வெளிநடப்பு செல்வது ண்டு. ஈரானிய ஜனாதிபதியின் காரசாரமான உரையின் போதும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல மேற்கு நாடுகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தன.

இஸ்ரேல் அதன் அண்டைய நாடுகளை தாக்குவதாகவும் கைப்பற்றப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடு களின் நிபந்தனையற்ற ஆதரவு இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது என்று ஈரானிய ஜனாதிபதி குற்றஞ் சாட்டை விடுக்கத் தொடங்கியதையடுத்தே மேற்கு லக தூதுக்குழுவினர் சபையிலிருந்து வெளிநடக்க ஆரம்பித்தனர்.

ஈரானிய ஜனாதிபதி அஹமதி நஜாத்தின் கூற்றை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலரி கிளின்டன் நிராகரித்தார்.

எப்போதும் போலவே பொய்யான குற்றச்சாட்டுக்களையே அவர் இம்முறையும் முன்வைக்கிறார் என்று கூறிய ஹிலரி சகல நாடுகளும் ஒன்றிணைத்து ஈரானின் அணு ஆயுத திட்டத்தை கைவிடச் செய்ய வைப்பதற்கு முன்வரவேண்டும் என்று ஹிலரி கிளின்டன் வலியுறுத்தினார்.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனினும் இவை அணு ஆயுதங்களை வைத்துள்ளன. வடைகொரியா முதலில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. எனினும் 2003 இல் அதிலிருந்து விலகிக் கொண்டு 2006 இலும் 2009 இலும் அணு சோதனைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக