20 ஏப்ரல், 2010

இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே வலியுறுத்தல்







இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது உருவாகியுள்ள சுமுகமான அரசியல் சூழ்நிலை வரவேற்கத்தக்கதென நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோன்ஸ் கார்டோர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் கடந்தசில மாதங்களாக சிறந்த நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முயற்சிகளுக்கு நோர்வே உதவத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக