20 ஏப்ரல், 2010






இத்தாலியில் மேலுமிரு இலங்கையர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் ஸ்ரெய்பா மற்றும் வெனிஸியா ஆகிய நகரங்களிலேயே இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரெய்பா நகரிலுள்ள ஓய்வுபெற்ற மேயர் ஒருவரது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவரும், வெனிஸியாவில் பணியாற்றிய ஆணொருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் இலங்கையர்கள் இருவரே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாகவும், கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய செய்திகள் கூறுகின்றன. இதேவேளை இத்தாலியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கையர்கள் கொல்லப்பட்டதும் இதுவிடயமாக சந்தேகத்தின்பேரில் இரு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டதும் தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக