20 ஏப்ரல், 2010

பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணைகள் மே மாதம் 4 ஆம் திகதி ஒத்திவைப்பு

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி புவனக அளுவிகார தமது வாதத்தினை முன் வைத்தார்.

அதேவேளை இரு தரப்பினரதும் வாதங்களை எதிர்வரும் 30ஆந் திகதி எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு, விசாரணைக் குழுவுக்கு தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் எம்.பி.பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக