16 மார்ச், 2010

தமிழில் பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி






இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றை செயற்படுத்தும் நோக்கில் நேற்று (15) வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் மேல் மாகாண வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சியின் தலைமையில் ஒரு நடவடிக்கை இடம்பெற்றது. இலங்கையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் தனது முறைப்பாட்டை தெரிவிக்கும் இந்த நடவடிக்கை ஏற்கனவே மேல் மாகாணத்தில் வெலிக்கடை, கொஹரூவலை, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையங்களில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. படிப்படியே நாட்டில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்படும்.
மேல் மாகாண வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நேற்று தமிழில் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை பரீட்சித்தார். நுகேகொடை பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னக்கோன், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அதி காரி (நுகேகொடை பிரிவு) நிஷாந்த சொய்சா மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி சரத் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(படம்- சுதத் நிஷாந்த)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக