16 மார்ச், 2010

கண்டியில் ஐ.ம.சு.மு. பிரசார வாகனம் விபத்து : ஒருவர் பலி; மூவர் படுகாயம்




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஹேந்தெனிய, கண்டி - குருநாகல் நெடுஞ்சாலையில் இவ்விபத்து நேற்று ஏற்பட்டது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்துடன் தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட்ட மேற்படி வாகனம் மோதியதில், சாரதி ஸ்தலத்தில் பலியானார். காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பிரசன்ன வீரவர்தனவின் வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக