18 பிப்ரவரி, 2010

இங்கிலாந்து புறப்பட்ட மாணவர் பாக். விமான நிலையத்தில் கைது!



இங்கிலாந்தில் உள் பர்மிங்ஹாம் நகருக்குச் செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏயார் லைன்ஸ் விமானத்தில் மாணவர் இக்பால் அசார் பயணம் செய்ய முயன்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோகி ரத்னா பகுதியை சேர்ந்தவர்ஆவார்.

சம்பவ தினத்தன்று அசார் இக்பால் விமானத்தில் புறப்படுவதற்காக ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது வழக்கமாக விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு செய்யப்படும் எக்ஸ்ரே கருவி மூலம் அவரை 'ஸ்கேனிங்' சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவரது காலணிகளில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதைஞ்கு தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக