18 பிப்ரவரி, 2010

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்; முடிவுகள் எட்டாத நிலையில் சிறுகட்சிகள்

கூட்டுச் சேர்வதிலும் சின்னத்தை தெரிவதிலும் பெருந்திண்டாட்டம
வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.

இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.

இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.


வாக்கெண்ணும் நிலையங்களில் அதிகாரிகளை இரட்டிப்பாக்க தேர்தல் திணைக்களம் தீர்மானம்


பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (19) ஆரம்பமாகின்றது. 22 மாவட்டங்களிலும் உள்ள தெரிவத்தாட்சி அதிகாரிகள் முன் னிலையில் வேட்புமனுக்களை கையேற் பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள் ளதுடன் மாவட்ட செயலகங்களுக்கு அருகில் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

இதேவேளை இம்முறை தேர்தலில் வாக்குகள் எண்ணும் நிலையங்களையும் வாக்கு எண்ணும் நிலைய உத்தியோக ஸ்தர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் எண்ண 35 ஆயிரம் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது குறித்து திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலைவிட பாராளுமன்றத் தேர்தலில் அதிக வேலைகள் உள்ளதுடன் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டி யுள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் குலதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் 20 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு எண்ணும் நிலையம் என்ற அடிப்படையில் 888 வாக்கு கள் எண்ணும் நிலையங்கள் அமைக்கப் பட்டன இம்முறை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான வாக்காளர்களுக்கென ஒரு வாக்களிப்பு நிலையம் அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் வாக்களிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்று அவர் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் 10 இலட்சத்து 875 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப் படவுள்ளன. இடம்பெயர்ந்த வாக்காளர் களுக்கு மற்றொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப் படவுள்ளன.

அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங் கப்பட்டுள்ளது.

இதேவேளை சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு 26ஆம் திகதி நண்பகல் வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகளின் தவறான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க கூட்டுத் தொழிற்சங்கம் தீர்மானம்



அரசுக்கு எதிராக பொய்யான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புப் பேரணிகளையும் மோதல்கள் அற்ற முறையில் முறியடிப்பதற்கு கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடிக்கும் வகையில் நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள மக்களின் பங்களிப்புடன் பாரிய எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தவும் இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ. ம. சு. மு. மற்றும் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளை பெற்றுக் கொள்வதென வும் கூட்டுத் தொழிற்சங்க சம் மேளனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கூட்டம் சம்மேளனத்தின் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தலைமையில் நேற்று நடந்தது. பம்பலப்பிட்டியிலுள்ள மேல் மாகாண ஆளுநரின் பணிமனையில் இந்தக் கூட்டம் நடந்தது.

இங்கு உரையாற்றிய ஆளுநர் அலவி மெளலானா கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தலின் மூலம் இந்த நாட்டு மக்கள் ஈட்டிய வெற்றியை முறி யடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடிக்க தொழிலாளர் வர்க்கத்தினர் தயாராகவுள்ளனர்.

தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசி யக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் சில முன்னெடுத்துவரும் சட்டவிரோத ஆர்ப் பாட்டம் தொடர்பில் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மனித படுகொலைகள் மூலமும் இரத் தக் களரிகள் மூலமும் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜே. வி. பி.யினரின் தூண்டுதல்களின் மூலமே பொன்சேகாவும் சதித் திட்டங்களை தீட்டியுள்ளார். இதனை மக்கள் நம்பப் போவதில்லை.

மக்கள் ஈட்டிய வெற்றியை நிர்மூலமாக்கு வதற்கு இனியும் இந்த நாட்டு மக்களும் தொழிலாளர் வர்க்கத்தினரும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் நல்லவர். சகல இன மக்களின் ஆதரவுடன் ஜனநாயக வழியில் நாட்டை முன்னேற்ற திட்டமிட்டுள்ளார். இதனை முறியடிக்க பல சக்திகள் முனைந்து வருகின்றன.

சுவரொட்டிகள் மூலம் நாட்டில் புரட் சியை ஏற்படுத்த பலர் முனைகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் மூலம் குழப்பங்களை விளைவித்து அது தமக்கு எதிராக முன் னெடுக்கப்பட்டது என புகைப்படங்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு காண்பிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அலவி மெளலானா சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.


தனுன திலகரட்னவின் தாயார் கைதாகி பிணையில் விடுதலை



குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் தாயார் அசோக்கா திலகரத்ன நேற்று கல்கிஸ்சை நீத வான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை யில் விடுதலை செய்யப்பட்டார்.

ஏழரை கோடி ரூபா பணம் அசோக்கா திலக ரத்னவின் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களிலி ருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர் பில் விசாரணை செய்யப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் தனுனவின் தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரி ஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டெடுக்க ப்பட்ட பணம் தொடர்பாக விசார ணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸரூக்கு வரு மாறு நேற்று முன்தினம் அசோக்கா திலகரத்ன வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், முழுமையான விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


தேர்தல் முடிவுக்கு எதிரான உச்சமன்ற மனு:
கணனி மூலம் திரிபு படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மனுவில் சேர்க்காதது ஏன்?



ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கணனி மூலம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல்செய்துள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மனுவில் அதனைக் குறிப்பிடாத தேன் என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபே வர்தன கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களும் சர்வதேசமும் நீதியானதென ஏற்றுக் கொண்ட தேர்தலை மோசடி என்று கூறுபவர்கள் பொதுத் தேர்தலில் இதைவிட மோசமான படுதோல்வியைச் சந்திப்பது நிச்சயமெனவும் குறிப்பிட்டார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த தேர்தல் நீதியானதென ஐரோப்பிய ஆணைக் குழு உறுதிப் படுத்தியுள்ளது. அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது. தேர்தல் வாக்களிப்பு முடி வடைந்த அன்றைய தினம் 4.00 மணிக்கு அத்தேர்தல் நீதியானதும் அமைதியுமானது மெனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றி களையும் தெரிவித்துக் கொண்டார்.

எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிக் கப்பட்ட பின்னர் அவருடன் இணைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கணனி மோசடியொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்துக்கு சமர்ப் பிக்கப்பட்டுள்ள மனுவில் அரச வளங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் குறிப்பிட் டுள்ளவர்கள் ஏன் கணனி மோசடி என் பதைக் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இவர்கள் அடுத்துவரும் தேர்தலுக்கான சூழ்ச்சிகளை இப்போதி ருந்தே ஆரம்பித்துள்ளமையே தெளி வாகிறது.

வீண் பிரசாரங்களை விட்டுவிட்டு நியாயமான அத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுநலவாய அமைப்பின் கூற்று தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கின்றதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஐரோப்பிய ஆணைக் குழு போன்ற பிரசித்திபெற்ற அமைப்புக்கள் நியாயமான தேர்தல் என குறிப்பிடும் போது சில அமைப்புக்கள் சில சக்தி களுக்கு சார்பாக அதற்கெதிரான கூற்றுக்களைத் தெரிவிப்பதை நாம் பெரிதுபடுத்த முடி யாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 150 ஆசனங்களைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து நல்லாட்சி யொன்றை அமைக்க முற்படும் அரசாங் கத்துக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக