15 பிப்ரவரி, 2010

யாழ்.கொழும்புத்துறையில் வெடிப்புச் சம்பவம்;இரு மாணவர்கள் பலி

முக்கிய செய்திகள்


யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் சற்று நேரத்திற்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காயமடைந்தோர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படுவதாக எமது பிராந்திய செய்டதியாளர் தெரிவித்தார்.

கொழும்புத்துறை இந்துக் கல்லூரியில் இந்தச் சமப்வம் இடம்பெற்றுள்ளது.அவ்வளாகத்தில் காணப்பட்ட பந்து போன்ற ஒன்றை எடுத்து பாடசாலை மாணவர்கள் விளையாடியபோது அது வெடித்துள்ளது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மேலதிக விபரங்கள் விரைவில்



ளையடுத்து 27 முதல் தேர்தல் பிரசாரம் : ஸ்ரீ.சு.க. அறிவிப்பு



எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இம்மாதம் 27ஆம் திகதி அனுராதபுரத்தில் மதவழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தமது பிரசார நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளனர்.

அன்றைய தினம் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி விகாரையில் மதவழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய மதவழிபாடுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் உறுதிப்பத்திரங்களை கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது



தேர்தல் சின்னம் குறித்து ம.வி.முன்னணி - ஜ.ம.முன்னணி பேச்சு




சின்னம் குறித்து ஐ.தே.கவும் மக்கள் விடுதலை முன்னணியும் மாற்றுக் கருத்தினை கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான முக்கியமான சந்திப்பொன்று ம.வி.முன்னணிக்கும் ஜ.ம.முன்னணிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடப்போவதாக ஜே.வி.பியும் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஐ.தே.கவும் அறிவித்தன. ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்பில் தாம் ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினர்களை ஜனநாயக மக்கள் முன்னணியினர் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது யானைச் சின்னத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என அக்கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்:டக்ளஸ் தேவானந்தா











பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளும் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர் இவ்வார இறுதிக்குள் தமது முடிவுகளை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும் எமக்குத் தெரிவித்தார்




ஐதேக பதுளை மாவட்ட அமைப்பாளராக சச்சிதானந்தன் : தேர்தலில் போட்டியிடவும் முடிவு



ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக எம்.சச்சிதானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளமை குறிப்பித்தக்கது.



புத்தளம் தலைமை கிராம அதிகாரி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு




புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் கிராம அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவந்த கொத்தான்தீவை சேர்ந்த எம். றாசிக் என்பவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவைக்கு சென்ற றாசிக்,அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்று வரை அவர் வீடு வந்து சேரவில்லையென்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக தொலைபேசியில் உரையாடிய போது தான் தற்போது மட்டக்களப்புக்கு பிரஸ்தாப வாகனத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குறித்த தகவல் தெரிந்தோர் புத்தளம் பிரதேச செயலகத்தின் இலக்கமான 0322265358 அல்லது புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0322265422 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.



தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை அறிவிப்பு : துரைரட்ணசிங்கம்



ஏப்ரல் மாதம் இடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கட்சி சார்பில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், போட்டியிடுவது மற்றும் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளர்கள் தொடர்பில் தாம் ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பதாகவும், அது உறுதிபடுத்தப்பட்டதும் நாளை முடிவினை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் எமது இணையத்தளத்திற்கு இத்தகவலைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக