15 பிப்ரவரி, 2010

இலங்கை பிரதமர் தேர்தல் பொன்சேகா மனைவி போட்டி; எதிர்க்கட்சிகளின் சார்பில் நிற்கிறார்

இலங்கை பிரதமர் தேர்தல்    பொன்சேகா மனைவி போட்டி;    எதிர்க்கட்சிகளின் சார்பில் நிற்கிறார்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத்பொன்சேகா தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் வருகிற ஏப்ரல் மாதம் பராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன.

இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவின் மீது ராஜபக்சே அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடத்தில் எடுத்து கூறி வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு சரியான வேட்பாளர் பொன் சேகாவின் மனைவி அனோமா தான் என முடிவு செய்துள்ளனர்.

எனவே, பிரதமர் தேர்தலில் பொதுவேட்பாளராக இவரையே நிறுத்த உள்ளனர். பொன்சேகாவின் மனைவி அனோமாவுக்கு ஜனதா விமுக்தி வரமுனா (ஜெ.வி.பி.) கட்சி தலைவர் சோமவான்சா அமர்சிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவின் முடிவு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற் கிடையே பாராளுமன்ற தேர்தலில் தமது கட்சி தலைமையிலான கூட்டணி பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ரனில் விக்ரமசிங்கே விரும்புகிறார்.

இது குறித்து அவர் தனது ஐக்கிய தேசிய கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது இலங்கையில் நீடித்து வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை ஏற்படுத்தவும் முயற்சி நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக