6 ஜனவரி, 2010

அதிபர் - ஆசிரியர் சம்பளம் இவ்வாண்டு உயரும் - கல்வி அமைச்சர்

2006 ஆம் ஆண்டின் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கு ஏற்ப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு இவ்வருடம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி செலுத்த உள்ள தொகையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி 1005 ரூபா முதல் 1685 ரூபா வரையிலான தொகை சம்பள அதிகரிப்பாக வழங்கப்படவுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முதலான நிலுவைத் தொகையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக