6 ஜனவரி, 2010

உறவினருடன் தங்கியிருந்தோர் கிளிவெட்டி முகாமுக்கு அனுப்பி வைப்பு

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த குடும்பங்களில் ஒரு பகுதியினர் நேற்று கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
6 பஸ்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் வாகரை ஊடாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட புனர்வாழ்வு திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷெரீப் தெரிவித்தார்.
சுய விருப்பத்தின் பேரிலேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர் மேலும் 48 குடும்பங்கள் தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 791 குடும்பங்களைச் சேர்ந்த 5159 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக