26 ஜனவரி, 2010

நாடுமுழுவதிலும் 70 வீதம் வாக்குப் பதிவு: பவ்ரல் அமைப்பு
ஸட் யகூசுஹஙிக்சூஹசுகூ ஞஙூஙீகூஙூக்

News Photo


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதமானோர் வாக்களித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் அதிகரியொருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் கேட்டதால் மக்கள் அச்சத்தில் வாக்களிக்கவில்லை என யாழ்.தேர்தல் அத்தியட்சகர் அலுவலக அதிகாரியொருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.


வவுனியா நலன்புரி கிராமங்களில் 50வீதமான வாக்குப் பதிவு
No Image

வவுனியா ந ன்புரி கி ராமங்களில் 50வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று ள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தில் வடக்கு கிழக்குக்கான இணைப்பாளர் எம்.எச்.எம். ஹஜ்மிர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் 43வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3.5வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் சிற்சில காரணங்களுக்காக வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக