21 டிசம்பர், 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவரை இன்றிரவு சந்திக்க ஏற்பாடு









தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட நால்வர் இன்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளனர். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதியுடனான சந்திப்பு எப்போது நடைபெறுமென்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவு யாருக்கு என்பது குறித்த அறிவித்தலை இதுவரை விடுக்காதநிலையில் பிரதான இரு வேட்பாளர்களினதும் தரப்புக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக