29 ஆகஸ்ட், 2009

பள்ளிவாசல் பாங் ஒசையை தடை செய்யப்போவதில்லை - இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் தமிழர் என்றும் சிங்களவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இனவாத அரசியல் என்பது இனிமேல் உகந்தது அல்ல என இலங்கை ஜ்னாதிபதி மகிந்த ராஜபக்ஷ் அக்கரைப்பட்டில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பட்டில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் என்று ஒருவரும் கிடையாது என்றும், மக்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முப்பது வருடங்கள் நாட்டை பீடித்து இருந்த பயங்கரவாதத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங் ஒசையை தான் தடை செய்ய போவதாக எதிரிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்ட அவர், முஸ்லிம்கள் தன் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக