3 அக்டோபர், 2009

நலன்புரி நிலையங்களிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட மக்கள் பஸ்நிலையம் மற்றும் கச்சேரியில் நிர்க்கதி-

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விண்ணப்பத்திருந்தவர்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், கைக் குழந்தைகளையுடைய தாய்மார்கள், மற்றும் உறவினர்களுடனும், சொந்த இடங்களில் சென்றுவாழ விண்ணப்பித்தவர்கள் உள்ளடங்கிய ஒரு தொகுதி மக்கள் இன்று முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா கச்சேரியிலும், வவுனியா பஸ் நிலையத்திலும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயண ஒழுங்குகள் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் இவர்கள் பஸ்நிலையம் மற்றும் கச்சேரியில் இறக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான அத்தியவாசிய உதவிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதற்கான முனைப்புக்களில் புளொட் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக