3 அக்டோபர், 2009

2010ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலையும், மார்ச்சில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு-

2010ம் ஆண்டின் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலையும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தவிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்;; அரசாங்கமானது ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவுமில்லை. ஊடகங்களுடன் அரசாங்கத்துக்கு எவ்வித பிணக்குகளுமில்லை. ஊடகவியலாளர்களை அழிப்பதோ அல்லது அதனூடாக இலாபம் பெறுவதோ அரசாங்கத்தின் நோக்கமல்ல. உரிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தி பத்திரிகைப் பேரவையை தொடர்ந்து செயல்படுவதற்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக