3 அக்டோபர், 2009

சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு நிவாரணம் : இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்


விடுதலைப் புலிகள் மற்றும் த.ம.வி.பு. அமைப்புக்களிலிருந்து படையினரிடம் சரணடைந்து, ஆயுதங்களையும் ஒப்படைத்த இளைஞர், யுவதிகளுக்கு வாழ்வாதார நிவாரண உதவிகள் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.



மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இடம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் (I.O.M.) இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது. அத்துடன் யுஎன்டிபி நிதி உதவி வழங்கியுள்ளது.



இன்று முதல்கட்டமாக, சரணடைந்த 30 போராளிகளுக்கு பல்வேறு வகையான தொழில் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மாவட்டத்தில் ஆயுதங்களை ஒப்படைத்த சுமார் 700 முன்னாள் போராளிகள் இவ்வாறு தொழில்வாய்ப்பின்றி வாழ்வதாக ஐ.ஓ.எம். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



படை அதிகாரிகள், ஐ.ஓ.எம். பிரதம அதிகாரி முஹம்மட் அப்டிகார் உட்படப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக