23 அக்டோபர், 2009

ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் ஒரு லட்சம் பேரை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை


ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு லட்சம் பேரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண குமார திசாநாயக்க தெரிவி்த்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் பேரை மீள்குடியமர்த்தும் நடவடிக்கையில் கலந்து கொண்டபோதே, நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 42 ஆயிரம் பேரை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கான ஆரம்ப வைபவங்கள் வியாழனன்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றன.

இந்த வைபவங்களில் 4950 பேர் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக மனிக்பாம் முகாம்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக