23 அக்டோபர், 2009

ஆஸியில் தஞ்சம் கோரியோரில் பயங்கரவாதிகள் இல்லை : கெவின் ரொட்




படகில் சென்ற 32 இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது








கிறிஸ்மஸ் தீவுக்கருகில் 13கிலோ மீற்றர் தூரத்தில் படகில் சென்று கொண்டிருந்த 32 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய விமானப்படையினர் கண்டு பிடித்ததை அடுத்து அனைவரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பழைய மரப்படகு ஒன்றை தாங்களாகவே செலுத்திக் கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்ட 32 பேரும் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு விமானப் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டனர். இந்த வருடம் அவுஸ்திரேலியா சென்று பிடிபட்ட 35ஆவது சட்டவிரோத படகு இதுவாகும்.

உயிர்காப்பு அங்கிகள் அணிவித்து இவர்கள் அனைவரையும் சுங்க அதிகாரிகள் கரைசேர்த்துள்ளார்கள்..

சுகாதார மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்காக இவர்களை குடிவரவு தடுப்பு முகாமுக்கு பஸ்ஸில் அழைத்து சென்றபோது இவர்கள் வீதியில் சென்றவர்களை நோக்கி கைகளை அசைத்து சிரித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இவர்களுடன் தற்போது மொத்தம் 1090 பேர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்


தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்போரில் பயங்கரவாதிகள் உள்ளடங்கவில்லை என அந்நாட்டு பிரதமர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதைப் போன்று சட்டவிரோத குடியேற்றக்காரர்களில் பயங்கரவாதிகள் எவரும் ஊடுறுவவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அடிப்படையற்ற வகையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தற்போதைய ஆட்சியாளர்கள் எல்லைப் புற பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையிலானோர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிய மேலும் இரண்டு படகுகளை அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்தப் படகுகளில் 32 இலங்கையர்கள் இருப்பதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக