2 செப்டம்பர், 2009

புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற சிலர் முனைப்புக் காட்டுவதாக தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவிப்பு-


புலிகள் இயக்கம் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதிலும், அவர்களுக்காக நிதி சேகரிப்பதிலும் சிலர் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் கருத்துரைக்கையிலேயே ஜாலிய விக்கிரமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதியான சமாதானம் அரசியல் தீர்வின் மூலமே ஏற்படும். வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முனைகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் தாங்களும் இலங்கையின் முக்கியமானவர்கள், தங்களது குரலுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டுமென்ற அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு உரிய தீர்வொன்றை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக