2 செப்டம்பர், 2009

இடம்பெயர்ந்துள்ள மக்களில் 30ஆயிரம் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள்-

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் 30ஆயிரம் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கான உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டங்களின் நிர்வாகப் பணிளுக்குப் பொறுப்பாகவுள்ள அரசஅதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த இரு மாவட்டங்களிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகள் என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் நிறைவுபெற்றதும், 30ஆயிரம் குடும்பங்களைக் குடியேற்றமுடியும் எனவும் அரசஅதிபர் குறிப்பிட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாண்டியன்குளம், துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், கிளிநொச்சி நகரின் வைத்தியசாலை, கிளிநொச்சி அரசசெயலகம் ஆகியவற்றில் திருத்தவேலைகள் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக