8 பிப்ரவரி, 2010








மி ழீ க்ள் விடுலை ம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம்.06.02 .2010 Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில்இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல்உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமுன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்துகொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள்விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில்வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும்தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயகமக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்குயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்தியஅமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகாலஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும்பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதெனதீர்மானிக்கப்பட்டது. எனவே கடந்தகால ஆதரவாளர்களையும்அங்கத்தவர்களையும எம்முடன் இணைந்து செயற்படுவதற்குபின்வரும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறுவேண்டுகின்றோம். நன்றி! - 6.2.2010 Germany தொடர்புகட்கு: 07154181312 (00497154181312), E-Mail: dplfgermany@ymail.com

மேலும் இங்கே தொடர்க...
எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி


ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் தெரிவித்தார்.

ரஷ்யாவின் நட்புறவு (லுமும்பா) பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததையடுத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

"இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, சௌபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம். இதனையடுத்து நான் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன்.

அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது.

வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.

அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது.

அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது.இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது.

நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை.எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழ கமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங்கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட்புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்" என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.



தேர்தல் குறித்து வார இறுதியில் ததேகூ கலந்தாலோசனை




எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தவார இறுதியில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் நாளை நாடு திரும்பக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்த பின்னர் தேர்தலில் தமது நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்



ஆளும் கட்சியிலோ,எதிர்கட்சியிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை:சிவாஜிலிங்கம்



பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில்," ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன்.

இதில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவேன். பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான எனது நிலைப்பட்டை இவ்வாரம் அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
..முன்னணிக்குள் பிளவு : ..முன்னணியில் பாரதிதாசன் இணைவு



மலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான பாரதிதாசன் சுமார் 2000 ஆதரவாளர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளார். கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த அமைச்சர் சந்திரசேகரனின் மறைவையடுத்து அவரது மனைவி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனால் கட்சியின் சில உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடு நிலவி வந்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் சுமார் 2000 பேர் வரையிலான ஆதரவாளர்களுடன் பாரதிதாசன் தமது கட்சியில் இணைந்து கொண்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பாரதிதாசனை கட்சியின் உபதலைவர்களுள் ஒருவராக இணைத்துக் கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று மாலை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்



ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்?



உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அவர் நாளை மறுதினம் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.

இதனையடுத்து தனது இரண்டாவது தவணைக்காலம் எப்போது ஆரம்பமாகி எப்போது நிறைவு பெறுகின்றது என்பது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக கோரியிருந்தார்.

அது தொடர்பில் பிரதம நீதியரசர் அசோக என் சில்வா தலைமையிலான நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க, பாலபெத்த பெந்தி, ஸ்ரீபவன், ஏக்கநாயக்க, சந்திரா ஏக்கநாயக்க, இமாம் ஆகிய ஏழு நீதியரசர்கள் குழு கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை (10) விரிவாக ஆராய்ந்தனர்.

இந்த ஆலோசனைகள் மறுநாள் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது , அதன் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதன் பிரகாரமே ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது





ஒரு லட்சம் தொழிலாளரின் தொழிலை பாதுகாக்க அரசின் மாற்றுத் திட்டம் என்ன?




ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிகின்றது. அவ்வாறெனின் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. இது தொடர்பில் தொடர்ந்து கூறியதாவது

"ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை நிறுத்துவதற்கு ஒன்றியம் தீர்மõனித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது மிகவும் அவதானமான நிலைமை என்பதனை குறிப்பிடுகின்றோம். இதன் மூலம் எமது நாட்டின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கிய விடயமாக சுமார் ஒரு இலட்சம் பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலைமை காணப்படுகின்றது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நாங்கள் இலகுவில் கருதிவிட முடியாது.

அந்தவகையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை எமது நாடு இழக்கும் பட்சத்தில் குறித்த ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற மாற்றுத்திட்டம் என்னவென்று பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் வினவுகின்றோம். ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்பை பாதுகாப்பதற்கான அரசின் திட்டம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.



வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு




வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார்.

தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யெமெனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

2008 / 2009 ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார்.

ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சவரம்பை உயர்த்துதல்

பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது. ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து முக்கியமாக வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன:

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ( ) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள்.

* 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.



பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு



கலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடு பிடித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்று வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளன.

இதேவேளை கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாக்கிரக எதிர்ப்புக் கூட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ஆளும் கட்சி

அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு தமது முன்னணியூடாக களமிறங்கும் வேட்பாளர்களைத் தெரிவதற்கென ஒரு குழுவும் அதே நேரம் வேட்பாளர் தெரிவில் சிக்கல் நிலை தோன்றும் பட்சத்தில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரைக் கொண்ட வேட்பாளர் தெரிவு அதிகாரிகள் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் மூன்றாக பிரித்து அதனடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று கூடுகிறது

இதன்படி கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றும் நாளையும் கூடுகின்ற மேற்படி தெரிவுக் குழுவினூடாக ஆளும் கட்சி சார்பிலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பிரதமர் தலைமையில்

இதேவேளை பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தலைமையில் பஷில் ராஜபக்ஷ எம்.பி. அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் டளஸ் அழகப் பெரும ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவிடம் வேட்பாளர் தெரிவு தொடர்பில் குளறுபடிகள் அல்லது பக்கச்சார்பு இடம்பெற்றிருப்பின் முறையிட்டு அக்குழுவினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வேட்பாளர் தெரிவு நடவடிக்கைகளை நாளை மறுதினம் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.

கட்சியின் நாடு முழுவதிலுமுள்ள தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்களையும் அதன் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு அழைத்திருக்கின்ற கட்சியின் உயர் மட்டம் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய கலந்துரையாடலுக்கு அனைத்து அமைப்பாளர்களும் இதில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் ஒதுக்கப்பட வேண்டியிருப்பதால் அது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது 16 அரசியல் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற அதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவை யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிலும் சில சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

ஜே.வி.பி. மந்திராலோசனை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பில் மந்திராலோசனைகள் இடம்பெற்று வருவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது இணைந்திருந்த எதிர்க் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பிலும் அதே நேரம் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பிலும் இங்கு கட்சிகளிடையே சிறிதளவான முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் எனினும் இந்த முரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு எட்டப்படும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தெரிய வருகின்றது.

தே.சு.மு. 19;ஹெல உறுமய 5

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் தமது வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பில் தீர்மானித்துள்ளன.

இதன்படி தேசிய சுதந்திர முன்னணி வடக்கைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ள அதேவேளை தமது கட்சியின் சார்பில் 19 பேரை வெற்றிலைச் சின்னத்தில் களமிறக்குவதாகவும் அது தொடர்பிலான பெயர்ப் பட்டியலை ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

அதே போல் ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் தமது கட்சி கொழும்பு உட்பட 5 மாவட்டங்களில் மாத்திரமே 5 வேட்பாளர்களை களமிறக்குவதாகவும் ஏனைய பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான நிதி வசதிகள் இல்லையென்றும் அக்கட்சியின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்கவில்லை

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து மலையக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே அது குறித்து சிந்திக்க வேண்டியிருப்பதாகவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சந்திரசேகரனை தேர்தலில் போட்டியிட வைப்பதா என்பது தொடர்பிலும் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. வெற்றிலையில்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடு முழுவதிலும் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஐ.ம.மு.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்பதால் அது யானைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் சகல பிரதேசங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் களமிறங்குவர்.


நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏபரல் 8 இல் தேர்தல்:அமைச்சர் ராஜித சேனாரட்ண தகவல்




நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும். ஜனாதிபதி தேர்தலில் போன்றே பொதுத் தேர்தலிலும் நாங்கள் வெற்றியடைவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ண இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம்.

அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.

முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சை இன்றும் நாளையும்

ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் வெற்றிலை சின்னத்தில் களமிறங்க முடிவு



பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ள தாகவும் கூட்டுக்கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து சகல கூட்டுக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பு மனுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் (8) நாளையும் (9) கொழும்பு மகாவலி நிலையத்தில் இடம்பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இந்த வாரத்தில் பூர்த்தி செய்யப்படும் எனவும் வேட்பாளர் தெரிவில் ஏதும் அநீதி இடம்பெற்றிருந்தால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வேட்பு மனு மேன்முறையீட்டு குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடமேல், வட மத்திய மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வேட்பாளர் குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முன்னிலையில் வேட்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெறும் என மேற்படி வேட்பு மனுக் குழு உறுப்பினர் மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவும் இன்று கூடி வேட்பாளர்களை தெரிவு செய்ய உள்ளது.

தென், சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான வேட்பு மனுக்குழு முன்னிலையில் நாளை (9) இடம் பெறவுள்ளது. பிரதமர் தலைமையிலான வேட்புமனு மேன்முறையீட்டு குழுவில் அமைச்சர்களான தி. மு. ஜயரத்ன, மைத்திரிபால சிரிசேன, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ எம்.பி., சட்டத்தரணி டபிள்யூ. கருணாஜீவ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் கூட்டுக்கட்சி வேட்பாளர்களின் பட்டியல்கள் இந்த வாரம் கிடைக்கும் எனவும் அதன்படி 15 ஆம் திகதியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் வேட்பாளர் பட்டியல் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இந்த வாரத்தில் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கட்சி முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேர்தலில் பல புதுமுகங்கள் போட்டியிட உள்ளதாகவும் சட்டத்தரணிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோர் இதில் அடங்குவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டுக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வேட்பாளர்களின் தொகை குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் தெரிவித்தார். இம்முறை தேர்தலில் பலம்வாய்ந்த வேட்பாளர் குழுவொன்றை நிறுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறின.

ஐ. தே. முன்னணி யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ள அதேவேளை ஜே. வி. பி. அடங்கலான சில கட்சிகள் அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

சரத் பொன்சேகாவுக்கு கட்சி பிரதித் தலைவர் பதவி வழங்கி அவரை ஐ. தே. மு. பட்டியலில் போட்டியிட வைக்க ஐ. தே.க. முயன்று வருகிற போதும் மேற்படி பதவியை ஏற்க சரத் பொன்சேகா மறுத்துள்ளதாக அறிய வருகிறது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் மு. கா. தனித்தா இணைந்தா போட்டியிடும் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அறிய வருகிறது.


வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை

ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு


வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.

இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.

மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

வவுனியா வடக்கு மீள்குடியேற்றம்

15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

மீள்குடியேறுவோருக்கு 8900 வீடுகள் நிர்மாணம்
வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் கட்டிக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்ப ர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டு ள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று (08) கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இலங்கைரஷ்யாவில் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட விழாவில் ஜனாதிபதி







ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்
உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு, பயங்கரவாதத்தை முறியடித்தமை மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நட்புறவு (பட்ரிக் லுமும்பா) பல்கலைக்கழகம் விசேட கெளரவ டொக்டர் பட்டமொன்றை வழங்கி கெளரவித்துள்ளது.

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் கிரெம்ளின் மண்டபத்தில் வைத்து நட்புறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிபோவ் இந்த கெளரவ டொக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு வழங் கினார். மொஸ்கோவின் பிபட்ரிக் லுமும்பாபீ பல்கலைக்கழகம் பின்னர் நட்புறவு பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது.

1995 முதல் உலகில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் சேவைகள் தொடர்பில் அரச தலைவர்களுக்கு இந்த டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் மேற்படி டொக்டர் பட்டத்தை பெறும் 6 ஆவது அரச தலைவர் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) ரஷ்ய தலைநகரில் ரஷ்ய புரட்சிக்கு முன்னரும் பின்னரும் அரச நிகழ்வுகள் இடம்பெற்ற கிரெம்ளின் மண்டபத்தை பார்வையிட்டார்.

அத்துடன் ரஷ்ய புரட்சியின் பின்னர் தொழிலாளர்களின் வெற்றியின் ஞாபகார்த்தமாக விளங்கும் செஞ் சதுக்கத்தையும் ஜனாதிபதி பார்வையிட் டார்.

கிரெம்ளின் நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார் மன்னர்கள் காலத்தில் உபயோகித்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை பார்த்தார்.

அதன்பின் 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயமொன்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.




உலக நாடுகளின் முதலீடுகளை கவரும் பிரபல கேந்திர சந்தையாக


வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டு ள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.

அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததையடுத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவ ருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும்.

இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, செளபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம்.

இதனையடுத்து நான் உங்கள் முன் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் உங்களால் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன்.

அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக் கிறது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது.

அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது.

இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது.

நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை.

எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழ கமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடு களில் உள்ள ஆயிரக்கணக்கானோ ருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங் கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட் புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.

மேலும் இங்கே தொடர்க...

7 பிப்ரவரி, 2010

ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது-


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்றுமாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு 100 நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ள இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஊடகத்துறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிராந்திய செய்தியாளர்களுக்கான குருநாகல் நகரில் தமிழ் மொழிமூல பாடநெறி-

குருநாகல் மாவட்ட பிராந்திய செய்தியாளர்களுக்கான பாடநெறியொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக குருநாகல் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். குருநாகல் வைத்தியசாலை சுகாதார அபிவிருத்திப் பிரிவினருடன் இணைந்தே இந்தப் பாடநெறி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி தகவல் தொழில்நுட்பம், புகைப்படம் எடுத்தல், நடிப்புத்துறை, செய்தித்துறை உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இதன்போது பயிற்றுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பாடநெறி முழுமையாக தமிழ் மொழியில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளமன்றத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானம்-

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும், அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரசதரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மைகருதி அரசுடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

உட்கட்டுமான பணிகளை முன்னெடுக்க சீனா 350மில்லியன் டொலர் நிதியுதவி-

இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரான உட்கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு, 350மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா நிதியதவியாக வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி கூ ஜின்ரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள சுதந்திரதினச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் எங்களின் நல்ல பங் காளிகள். அந்த நாட்டுடன் அடுத்த வருடங் களில் உறவுகளை அதிகரிக்கவுள்ளோம். இலங்கையின் வளர்ச்சிக்கு சகல விதமான ஒத்துழைப்பையும் சீனா வழங்கும். யுத்தகாலத்தில் சேதமடைந்த வீதிகள் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை புனரமைக்க 350மில்லியன் அமெரிக்க டொலர் களை வழங்கவிருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு 6.1கோடி அமெரிக்க டொலர்களை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளதெனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரஸ்ய ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடு-


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரஸ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவை நாளையதினம் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பு நாளை பிற்பகலில் இடம்பெறுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்போது 300மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இருநாடுகளின் தலைவர்களும் கைச்சாத்திடவுள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் ரஸ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறவுள்ள சுதந்தினதின வைபவத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவுச் சதி தீட்டப்படுகிறது:வினோநோகராதலிங்கம்



பொதுத்தேர்தலின் போது வட-கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து , நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு,ஓரணியாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதை ஜீரணிக்க முடியாதவர்களும், கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் சங்கமித்துப் போவதை தடுக்க முனைபவர்களுமே என்ன விலை கொடுத்தேனும் இவ் இரகசிய திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனர்.

இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வட-கிழக்கின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு ,மாவட்டங்களில் குறைந்தபட்சம் தலா மூன்ரு சுயேட்சை வேட்பாளர் குழுக்களை நிறுத்துவதன் மூலம் தமிழ் பிரதிநித்துவத்தை தகர்க்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எமது மக்களில் சிலரை பலிக்கடாவாக்கி சிலநூறு அல்லது சில ஆயிரம் வாக்குகளை பிரித்தெடுப்பதன் மூலம் தமிழ் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை குறைக்கலாம் என்ர இலாப நட்டக் கணக்கு போடப்படுகிறது.

இதற்காக எம்மந்த்தியில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து ஆட்சேர்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றோம்.

இதற்காக சாதி, மத, பிரதேச உணர்வுகள் ஊட்டப்படுகின்றன.எம்மத்தியில் இலகுவாக ஏமாறக்கூடிய சிலரை வளைத்துப்போட்டு தமது சுயநல அரசியல் இலக்கினை எட்டுவதற்கு இவர்கள் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள்.

தமிழ் மக்களினதும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் பலத்தையும், ஒற்றுமை உணர்வையும் உடைத்தெறிய எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் தெரிந்தோ தெரியாமலோ நாம் துணை நிற்கக் கூடாது

இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,இளைஞர்கள், விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும்.வரவிருக்கும் புதிய அரசுடன் பேரம் பேசக் கூடிய சம அரசியல் பலம் எம்மிடம் இருக்க வேண்டும்.

இதை உணர்ந்து விட்டுக்கொடுப்புகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட காலம் கனிந்துள்ளது.தமிழ் மக்கள் ஒன்றாக, ஒரே சிந்தனையுடன் இருக்கும்போது தமிழ் இயக்கங்கள், கட்சிகள் பிரிந்து நின்று ஒன்றுமே ஆகிவிடப்போவதில்லை.தலைமைத்துவத்தை வழங்க தகுதியற்றவர்களாகிவிடுவோம்.

ஆயுதபோராட்டத்தில் தோல்வியடைந்த நாம் அரசியல் போராட்டம் ஒன்றில் தோல்வியை சந்திக்கக் கூடாது.எம்மிடையே ஒற்றுமை குலைந்து போனால் இருப்பதையும் நாம் இழந்துவிடுவோம்.கடந்துபோன கசப்பான படிப்பினைகளை உணர்ந்து எந்த சதி முயற்சிகளையும் முறியடிக்க எமது அரசியல்பலத்தை நிலைநிறுத்த கடுமையாக நாம் உழைக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட இ.தொ.க. தீர்மானம்



தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டி யிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மை கருதி அர சாங்கத்துடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதி அமைச்சர் கூறினார்.இந்தத் தேர்தலில் பழையவர்களுடன் பல புதிய முகங்களும் அறிமுகமாகவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பே போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருவதால் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக விஜேகுமாரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளைக் கருத்திக்கொண்டு ஏனைய மலையகக் கட்சிகள் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாத திண்டாட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறின.

கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் மலையகத்தில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசித்து வரும் அதேநேரம், பெரும்பான்மைக் கட்சிகளின் பட்டியலில் போட்டியிடுவது தொடர்பிலும் யோசனைகள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

மேலும், மலையகத்தில் கட்சி தாவியவர்கள் போட்டியிட்டு வெல்வதா, தேசியப் பட்டியலில் இடம்கோருவதா என்பதைச் சிந்தித்து வருவதாகத் தெரியவருகிறது



ஐ.நாவின் குற்றச்சாட்டை அமைச்சர் முரளீதரன் மறுக்கிறார்



நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மறுத்துள்ளார்.

தம்மை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மேட் அவர்களைச் சந்தித்த போது, இனியபாரதி அவ்வாறான சிறுவர்களை படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை அவருக்கு தெரிவித்ததாக அமைச்சர் முரளீதரன்குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் , சிறுவர்களை தமக்கு படைகளில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் இனியபாரதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அம்பாறையில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்



மன்னாரில் ஜனாதிபதி வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் றிசாட் நன்றி தெரிவிப்பு


மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நேற்று மன்னார் சென்றிருந்த அமைச்சர் வாக்களித்த அனைத்து மக்களிற்கும் நன்றி தெரிவித்தார்.

இதன்போது நேற்றுக் காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரை இந்நிகழ்வு இடம்பெற்றது.உப்புக்குளம், பள்ளிமுனை, பனங்கட்டிக்கோட்டு, மூர்வீதி, தோட்ட வெளி, புதுக்குடியிருப்பு, காட்டாஸ்பத்திரி , பேசாலை முருகன்கோவில், துள்ளுக்குடியிருப்பு, தலைமன்னார் ஆகிய கிரமங்களுக்குச் என்று மக்களுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை .

மதவாச்சி மிதலைமன்னார் புகையிரதப் பாதை புனரமைப்ப பணிகள் வெகு விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழவின் தலைவரும் மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று மன்னார் மாவட்டத்தில் உப்புக்குளம்,பேசாலை,தலைமன்னார் பகுதிகளில் இடம் பெற்ற கிராமிய மீள் எழுச்சி திட்ட அபிவிருத்தி பணிகளுக்கான காசோலைகளை கையளிக்கும் வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்டான்லி டிமெல், மீளெழுலுச்சித் திட்ட மன்னார் மாவட்ட பணிப்பாளர் ரொபட் குரூஸ்,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர்,தொழிலதிபர் கலாநிதி யூசுப் கே மரைக்கார் உட்பட பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டததில் தெரிவு செய்யப்பட்ட 11 கிராமங்களில் ஏற்கனவே இத் திட்டம் 25 கிராமங்களில் நடை முறைப்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு மேலதிகமாக 15 கிராமங்களில் இத்திட்டம் நடை முறைப்படுத்துவதற்கென நேற்றைய தினம் 120 மில்லியன் ரூபாய்களை அமைச்சர் றிசாட் பதியுதீன்,கிராம அபிவிருத்தி சங்கங்களிடம் கையளித்தார்.

இதே வேளை இத் திட்டத்தின் மூலம்,அரிப்பு நீர் விநியோகத் திட்டத்திற்கு 10 மில்லியன் ரூபாய்களும்,9 பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள் நிர்மாணிப்புக்கு 20 மில்லியன் ரூபாய்களும்,25 மையக் கிராமங்களின் அபிவிருத்திக்கென 190 மில்லியன் ரூபாய்களும்,கட்டுக்குரை குளப் பனரமைப்பு பணிக்கென 385 மில்லியன் ரூபாய்களும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஒதுக்கப்பட்ட மேலதிக 40 மையக் கிராமங்களுக்கான நிதியல் வாழ்வாதாரம்,கட்டுமான நிதி என்பவைகளும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் :-

கடந்த தேர்தலில் மன்னார் மாவட்ட மக்களில் பலர் ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக மாறியுள்ளனர்.வாக்களிக்காதவர்கள் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக,எமது மாவட்ட மக்களினதும்,எதிர்கால சமூகத்தினது எதிர்பார்ப்புக்களை சூனியப்படுத்திவிட முடியாது.எமது மக்கள் அனுபவித்த இழப்புகளும்,அழிவுகளும் போதும்.இனி அவர்கள் வசந்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் செயற்படுகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணித்து இளைஞர்,யுவதிகளின் தொழில் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிட்டுள்ளேன்.இன்னும் 8 வருடங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருப்பார்,அரசாங்கமும் அவர் தலைமையிலானதாகவே இருக்கும்.இனியும் எமது மாவட்ட மக்கள் எதிர்கட்சி ஆசனங்களை அலங்கரிப்பவர்களுக்கு வாக்களித்து,தத்தமது தலைகளில் மண்ணை வாரி வீசிக் கொள்ள வேண்டாம்.

இனவாதம்,மத வாதம்,பிரதேச வாதங்கள் ஒரு போதும் எமது முயற்சிக்கு துணையாக அமையாது.மாறாக அதனைவிடுத்து மனித சமூகம் எமது மக்கள்,என்ற சிந்தனையினை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.இன்று மன்னார் தலை மன்னார் பாதை நவீனமயப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கள இலகுபடுத்தப்பட்டுள்ளது.கமநெகும,மகநெகும,நெகோர்ட்,அமைச்சின் நிதி ஒதக்கீடுகள் என மன்னார் மாவட்டம் பல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுள்ளது.

கடந்த கால யுத்த அழிவுகள் மக்களை அகதிகளாக மாற்றியுள்ளது.இனியும் அந்த நிலையை தோற்றுவிக்க,இனவாதம் மூலம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளையும் பிளவுகளையும் தோற்றுவிக்கம் சக்திகளுக்கு மன்னார் மாவட்ட மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்கமாட்டார்கள் என்பதை நம்புகின்றேன்.எமது மாவட்டத்தில் உள்ள ஏனைய 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை,எதிர்கட்சியுடன் சேர்ந்து தமது காலத்தை கழித்தனர்."என்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறினார்



பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அவசரகாலச் சட்டம் அவசியமில்லை:பெஃப்ரல்



நாடாளுமன்றத்தில் அவசகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது குறித்து நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பி.பிசி. தமிழோசையிடம்கருத்து தெரிவித்துள்ள பெஃப்ரல் அமைப்பின் நிரிவாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி,"இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கப் போகிறது எனவே இப்போது இது போன்ற அவசர கால நிலையை நீடிக்க தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

அதே நேரம் அவசர கால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர நிலை சட்டம் துஷ்பிரோயகம் செய்யப்பட்டதாக தமக்கு இதுவரை நேரடிப்புகார்கள் வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்



வன்னியில் மதவழிபாட்டு தலங்கள் அனைத்தும் முற்றாக அழிந்துள்ளன-யாழ்.மறைமாவட்ட ஆயர்



வன்னியில் தான் பயணம் செய்த பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலங்கள் மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் மருத்து வமனைகள் போன்ற இடங்கள் கடும் சேதமாகியுள்ளதாகவும் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மனோ பெரேராவின் அனுமதியைப் பெற்றே ஆயர்அங்கு சென்றுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி அவர் புதுமாத்தளன் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்து திரும்பிய பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலில் அவர் புதுக்குடியிருப்பில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தை பார்வையிட்டுள்ளார். புனித சூசையப்பர் ஆலயம் பல்வேறு இடிபாடுகளுடன் காணப்படுகிறது. கட்டிடத்திற்கு கூரையில்லை. திருச்சுருவங்கள் அரைகுறையாகவே உள்ளன. இந்த ஆலயம் பழமைவாய்ந்த ஆலயம். ஆலயத்திற்கு அருகில் உள்ள கட்டிடம் பாதிரியார்கள் தங்ககுவதற்காகக் கட்டப்பட்டது. இக்கட்டிடமும் பல இடிபாடுகளுடன் காணப்படுகிறது. அங்கிருந்த குழந்தையேசு ஆலயம் செபஸ்தின் ஆலயம் போன்றவையும் சேதமடைந்தே காணப்படுகின்றன.

இக் கோயிலுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையும் பல்வேறு இடிபாடுகளுடனே காணப்படுகிறது. இரணைப்பாலை வழியாக செல்லும் போது அங்கிருந்த புனித பாத்திமா ஆலயம் கூடுதலாக சேதமடைந்திருந்தது. பச்சைப்புல்லுக்குளம் என்னும் இடத்திற்கு அவர் விஜயம் செய்த போது 100 கணக்கான வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அடுக்கி வைக்கப்ப்பட்டிருந்தன. இவ்வாறு தாம் விஜயம் செய்த அனைத்து இடங்களிலும் உள்ள ஆலயங்கள் கட்டிடங்கள் சேதமடைந்தே காணப்படுகிறது. தங்களுடைய வரவை முன்கூட்டியே அறிந்தது சுற்றாடலை மட்டும் சுத்தம் செய்துள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கொள்வனவுக்காக இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது ரஷ்யா


தளபாடங்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இவ்விஜயத்தின் ஒப்பந்தத்தில் கைச்சாத்தி டப்படுவதற்காக ஒப்பந்தமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை நிதி அமைச்சர் பான்கின் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கான ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷ்யா 300மில்லியன் டொலர்களை இலங் கைக்கு வழங்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் ரியா நோவாஸ்தி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 3 நாள் ரஷ்ய விஜயத்தின்போது ரஷ்யாவின் மக்கள் நட்புறவு பல்கலைகழகத்தின் பொன்விழா நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிக ளுக்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்துக்கு ரஷ்யா ஆதரவளித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜ யம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், இலங்கைக்கு இராணுவ உத விகளை வழங்குவதற்கு முன்வந்தமை குறிப் பிடத்தக்கது


எதிர்கட்சிகளின் கூட்டு உடைகிறது



ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட எதிரணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிளவுபடும் நிலை உருவாகின்றது. எதிரணிக் கட்சிகள் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்த சர்ச்சை இடம் பெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க. யானைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கின்றது. ஜே.வி.பியை அடுத்த தேர்தலில் கூட்டணியில் இணைத்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள ஐ.தே.க., தேர்தலுக்குப் பிறகு ஜே.வி.பி.யை சேர்த்துக் கொள்ளுவது குறித்து ஆலோசிக்கலாமெனத் தெரிவித்துள்ளது. எதிரணியின் சரத் பொன்சேகா தரப்பு அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயார் நிலையிலிருந்தபோதும் அந்த சின்னத்திற்கு உரியவரான ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க அனுமதியளிக்க மறுத்ததையடுத்து கழுகு சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிரணியில் பிளவு

அதேவேளையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார். இதன் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பதினான்கு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக பிரிந்து நின்று செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகா வீட்டில் நீண்ட நேரம் இடம்பெற்ற கலந்தாலோசனையின் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரலின் நெருங்கிய வட்டாரங்கள் வீரகேசரி வார வெளி யீட்டுக்குத் தெரிவித்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமைக்கப் பட்ட அதே கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்வது. அன்னப் பறவைச் சின்னத்திலேயே தேர்தல் களத்தில் குதிப்பது, தன்னையே பிரதான வேட்பாளராக கொண்டு தேர்தலுக்கு முகங்கொடுப்பது ஆகிய மூன்று ஆலோசனைகளையும் ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்திருந் தார். இந்தக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க மாற்று ஆலோசனை களையும் முன்வைத்தார். ஆனால், ரணிலின் அனைத்து ஆலோசனைகளையும் ஜெனரல் பொன்சேகாவும் முற்றாக நிராகரித்து விட்டார்.

தானே பிரதான வேட்பாளராகக் களமிறங் குதல், யானைச் சின்னத்திலேயே தமது கட்சி ஊடாகப் போட்டியிடல், ஜெனரல் சரத் பொன் சோகாவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் முக்கிய பதவி யொன்றினை வழங்குவது போன்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோச னைகளையே ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

சமரச முயற்சி தோல்வி

இவ்வாறான முரண்பாடுகளைக் களைந்து இவர்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்கள், குறிப்பிட்ட இருதரப்பினரையும் சமரசப்படுத் தும் வகையில் கடந்த புதன், வியாழக் கிழமைக ளில் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

சரத் குழு கழுகு சின்னத்திலேயே போட்டியிட முடிவு

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத் தில் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திராவின் தலைமையில் நடைபெற்ற மந்திராலோசனையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் 14 கட்சி களில் ஐந்து கட்சிகள் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன் சேகாவுக்கு ஆதரவாகச் செயற்படுவதென்றும் கழுகு சின்னத்தில் போட்டியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஐ.தே.க ஜே.வி.பி.இணைப்பு இல்லை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக் குள் ஜே.வி.பி.யையும் இணைத்துக் கொண்டு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். அவ்வாறு ஜே.வி.பி.யினரையும் இணைத்துக் கொள்ளும் போது அவர்களுக்கான வேட் பாளர் பட்டியலில் இட ஒதுக்கீட்டில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வருமென ரணில் தெரிவித்துள்ளார். அதுமட்டு மன்றி இரு கட்சிகளின் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டிய தாக வும் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி. யினை இணைத்துக் கொள்வதால் தமிழ் பேசும் மக்க ளின் வாக்குகளையும் தமது முன்னணி இழக்க நேரிடலாமெனவும் அவர் சுட்டிக்காட் டியதாக நம்பகமான செய்திகள் தெரிவிக் கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேவை ஏற்படின் ஜே.வி.பி.யையும் இணைத்து அர சொன்றினை அமைப்பது குறித்து ஆலோசிக் கலாமெனவும் ரணில் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இட ஒதுக்கீட்டில்ஐ.தே.க. ஜ.ம.மு இடையில் இழுபறி

இதேவேளை ஜனநாயக மக்கள் முன்ன ணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை பங்கிட் டுக் கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா கவும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத் திலே நேற்று முன்தினமிரவு ரணில், பொன் சேகா, மனோ, ரவூப், கரு ஜயசூரிய, ரவி கருணா நாயக்க ஆகியோர் கலந்துகொண்ட பேச்சு வார்த்தைகளின் இடையில் மனோ கணே சன், ரவூப் ஹக்கிம் ஆகியோரது கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் ஒதுக்கப்படுமென ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தபோது அதை கோபத்துடன் இடை மறித்த மனோ கணேசன் தாம் இங்கு வந்தது ஆசனங் களை பற்றி பேசுவதற்காக இல்லை என்றும், தமது கட்சியின் பங்களிப்பு இருந்திருக்கா விட்டால் கொழும்பு மாநகரத் தின் ஐந்து தொகுதிகளிலும் ஜனாதிபதித் தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாதென்றும் கூறிவிட்டு கூட்டத்திலிந்து இடை நடுவில் வெளியேறியதாக வெளிவந்த செய்தி தொடர் பில் ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறியதாவது,

இச்செய்தி உண்மையானது தான். சரத் பொன் சேகாவை தொடர்ந்தும் எமது கூட்டணி யில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது,கொழும்பு மாவட் டத்தில் எமது கட்சி சார்பாக கூட்ட ணியிலே போட்டியிடும் வேட்பாளர் தொகை பற்றிய கருத்து பேசப்பட்டமை துரதிர்ஷ்டவசமானதா கும். இதை பேசுவதற்காக நாம் அங்கு போகவில்லை. நேற்று முன்தினம் காலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் அழைப் பின் பேரில் அவரை நான் சந்தித்தபொழுது, ஜே.வி.பி.யின் வேட்பாளர்களை கூட்டணி வேட்பாளர் பட்டியலிலே உள்வாங்குவதற்கு உள்ள இயலாமையையே தாம் அவ்விதம் குறிப்பிட்டதாகவும், எமது கட்சியின் வேட் பாளர் தொகை பற்றி கருத்துக் கூறவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் விளக்கி கூறினார். எனவே, இத்துடன் இவ்விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் சிலமணி நேரங்களுக்கு முன்னாலே நடைபெற்ற இந்த கடைசி கலந்துரையாடலின் போது ஐ.தே.க தலைவரிடம் நான் தெரிவித்த கருத்துகளை ஊடகங்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமையென எண்ணுகின்றேன்.

எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன் னணி கடந்த மூன்று வருடங்களில் துரித வளர்ச் சியை கண்டுவிட்ட ஒரு தேசிய தமிழ் கட்சி யாகும். எமது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை ஐ.தே.க புரிந்துகொண்டு எமக்குரிய அந் தஸ்தை வழங்கவேண்டும். எதிர்வரும் தேர்த லில் நாம் நாடு முழுக்க பல்வேறு மாவட்டங் களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். எனவே, நாம் இன்று ஓர் கொழும்புக் கட்சி அல்ல. ஆனால் கொழும்பு மாவட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தலைநகர தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து வாக்களித்து, எமது கட்சிக்கு தந்துவரும் உற்சாகத்தினால்தான் இன்று நாம் நாடு முழுக்க தேசிய ரீதியாக செயற்பட முடிகின்றது. எனவே என்னை வாழ வைக்கும் தலைநகர தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன். கொழும் பிலே வாழும் இந்தியவம்சாவளி மற்றும் வடக்கு, கிழக்கு சார்ந்த அனைத்து தமிழ் மக்களும் தமிழர்கள் என்ற இன அடிப்படை யில் எமது கட்சியுடன் உணர்வு பூர்வமாக அணிதிரண்டு உள்ளார்கள் என்பதை பெரும் பான்மை கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 25 உறுப் பினர்கள் தமது கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, ஆளுங்கட்சியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள் ளார்கள். ஐ.தே.க.வுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்த மலையக கட்சிகளும் இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டி ருக்கின்றன. ஆனால் நாம் உறுதியுடன் பல்வேறு சவால்களை சந்தித்தபடி ஐ.தே.க கூட்டணியில் தொடர்ந்தும் இருந்துகொண்டி ருக்கின்றோம். இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஐக்கிய தேசிய கட்சி எமக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அரசியல் சவால்கள் என்ற ஆற்றை கடக்கும் வரைக்கும் அண்ணன், தம்பி எனக்கூறிவிட்டு ஆற்றைக் கடந்தபின் அதாவது நாடாளுமன்ற தேர்தலின் போது நீ யாரோ நான் யாரோ என ஐ.தே.க கூறுமானால் நாம் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். கொழும்பு மாவட்டத்திலேயுள்ள ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளின் மீது பேராசை இருக்கின்றது. எமக்கு இரண்டு இடங்களை கொடுத்துவிட்டு தமிழர்களின் மூன்றாவது விருப்பு வாக்கை கவர்ந்துகொள்வது இவர்களது முதல் திட்டம். அது சரிவராவிட்டால் தமிழ் வாக்காளர்களின் மூன்று விருப்பு வாக்குகளுக்கு எதிராக நான்கு அல்லது ஐந்து தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் விருப்பு வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது இவர்களது இரண்டாவது திட்டம்.

அதாவது தமிழ் மக்களின் கட்சி வாக் குகள் யானை சின்னத்திற்கு வந்து குவிய வேண்டும். ஆனால் தமிழர்களின் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு உரிய தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்ற இந்த கபடத்தனமான இனவாத ஐ.தே.க அரசியல் வாதிகளை பற்றி எமக்கு தெரியும். தமது சுயநல நோக்கங்களுக்காக இவர்களுக்கு துணை போகும் சில தமிழர்களையும் எங்களுக்குத் தெரியும். இவர்களை இனிமேலாவது திருந்துங் கள் என நாம் கூறுகின்றோம். பல்லாயிரக் கணக்கான தமிழ் விருப்பு வாக்குகள் பெரும் பான்மை வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு சிங்கள வாக்குக ளைக்கூட இவர்களால் எங்களுக்கு பெற்றுத்தர முடியாது. இந்த ஒரு வழிப்பாதை மோசடி அரசியலுக்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்தில் மூன்று தமிழ் எம்.பி.க்களை நாம் உருவாக்குவோம். ஏனென் றால் தமிழர்களுக்கு துன்பம் வந்தால் அது எனக்குத்தான் வலிக்கின்றது. எனவே எனக்கு துணையிருப்பதற்கு இன்னும் இரண்டு எம்.பி.க்களை நாம் பெறவேண்டும். இது இன வாதம் இல்லை. எங்களது உரிமை. அடுத்த வர்களின் உரிமைகளில் நாம் ஒருபோதும் அபகரிக்க மாட்டோம். அதேவேளையில் எங் களது உரிமைகளில் ஓர் அங்குலத்தையேனும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்கு உரிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு கிடைக்கவேண்டும். எங்கள் தன்மானத்தை விட்டு விட்டு வேட் பாளர் ஆசனங்களுக்காக நாங்கள் எவரிடமும் மன்றாடுவோம் என்று கிஞ்சித்தும் கருதவேண் டாம் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன் னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.



அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிபடகில் சென்ற 45 இலங்கையர் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் நேற்று மீட்பு


அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடி படகொன்றில் சென்றுகொண்டிருந்த 45 இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் நேற்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படகிலிருந்து கிடைத்த இடர்கால சமிக்ஞைகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையொன்றின் கப்பலினால் மேற்படி அகதிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அகதிகள் ஜனவரி 20 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டதாகவும் கடந்த நான்கு நாட்கள் அவர்கள் உணவு, நீர் எதுவுமின்றி தவித்ததாகவும் அவுஸ்திரேலியா வின் அகதி கள் செயற்பாட்டுக் கூட்டமைப் பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட அகதிகள் அனைவரும் கிறிஸ் மஸ் தீவிலுள்ள அகதிகள் தடுப்பு நிலையத் திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் மேற்படி அகதிகளில் சிலர் அம்மை நோய் மற்றும் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் மேற்படி பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
பிரபாகரனின் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு!





கொழும்பு,பிப்.6: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் பெரிய ஆயுதக்கிடங்கை இலங்கை போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கை ராணுவத்துடனான இறுதிக் கட்டப் போரில் இந்த ஆயுதக் கிடங்கை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தி இருக்கலாம் என்று அந்நாட்டு போலீஸôர் கருதுகின்றனர்.

பூமிக்கடியில் பல அடி ஆழத்தைக் கொண்ட அந்த ஆயுதக்கிடங்கில் போலீஸôர் சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் தற்கொலைப் படை வீரர்கள் அணியும் வெடிகுண்டுகள் அடங்கிய ஆடைகள், 7000 சக்தி வாய்ந்த கண்ணிவெடிகள் உள்பட சக்தி வாய்ந்த ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீஸôர் கைப்பற்றினர்.

தவிர, அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து பிரபாகரன், அவரது குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏராளமானவற்றையும், 56 சி.டி.க்களையும் போலீஸôர் கைப்பற்றினர்.

பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் 6 பேரை இலங்கை அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில்தான் இந்த ஆயுதக் கிடங்கை போலீஸôர் கைப்பற்றினர் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் முக்கியமானவையாக அரசு கருதுகிறது. புலிகள் அமைப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு இந்த ஆவணங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு நினைக்கிறது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த போர் கடந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவுற்றது. இதையடுத்து புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் கண்ணிவெடிகள் உள்பட ஆயுதங்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தியதாகவும், இதனால் இப்பகுதியில் புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கலாம் என்றும் அரசு நம்புகிறது. இதனால் இப்பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணியில் அதிகப்படியான குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகே, வன்னிப் பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும், ஏராளமான ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வன்னிப் பகுதியில் புலிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பார்த்து மீட்புக் குழுவினரே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.



கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல்:ஏஜன்டுகள் குறித்து ரகசிய விசாரணை







ராமநாதபுரம்:ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல் அதிகரித்துள்ளதால், பழைய மற்றும் புதிய ஏஜன்டுகள் குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின், கடத்தல் முற்றிலும் நின்றுவிட்டதாக போலீசார் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது, இலங்கையில் உள்ள முக்கிய ஏஜன்டுகள் மூலம், மீண்டும் தமிழகத்திலிருந்து பல்வேறு பொருட்களை கடத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இதன் மூலம்தான் கடந்த மாதம் இலங்கையிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் ஹவாலா பணம், கீழக்கரை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டு, துப்பாக்கி குண்டுகள், ஹெராயின், சேட்டிலைட் போன் போன்ற பொருட்கள் கடத்த முயன்ற போது, நான்கு பேரை கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.இதில், சேட்டிலைட் போன் வைத்திருந்ததால் பயங்கரவாத செயல்களுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்குள் ஏதேனும் அசம்பாவித செயல்களில் ஈடுபடலாம் என சந்தேகித்து, உயர் அதிகாரிகள் வரை தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், இச்சம்பவத்தில் முக்கியமான ஒருவர், ஏற்கனவே இலங்கைக்கு பலமுறை ஆட்களை அனுப்பியது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பொருட்கள் கடத்திய வழக்கில் தொடர்பு உடையவர் என்பதால், இவர் மூலம் மேலும் பல ஏஜன்டுகள் உருவாகியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரை பகுதியில், வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பவளப்பாறைகளை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் தப்பினர். தப்பியவர்கள், பவளப்பாறைகள் மட்டும்தான் வைத்திருந்தனரா, துப்பாக்கி குண்டுகள், போதை பொருட்கள் போன்றவை வைத்திருந்தனரா என்பது தெரியாத நிலையில், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கியூ பிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார், கடலோர பகுதி இன்பார்மர்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் இங்கே தொடர்க...