4 ஜூலை, 2011

லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர்

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன்போது தமிழ் இளைஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தினுள் ஓடியுள்ளார்.

இதனையடுத்து அவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக