4 ஜூலை, 2011

இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி

இந்திய தஞ்சை மாவட்ட திலகா திடலில் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளையொட்டி சுடரேந்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை தமிழர் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனியஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. ராசேந்திரன், தமிழர் தேசிய பேரவை தலைவர் துரை குபேந்திரன், அறிவியல் பேரவை தலைவர் பேராசிரியர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, உடல் உழைப்பு சங்க பொதுச் செயலாளர் வெ. சேவையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனியஸ் கட்சி நகர செயலாளர் ராசேந்திரன், மக்கள் விடுதலை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா முழுவதும் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நடைபெறுவதையொட்டி தஞ்சை திலகர் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி உறுதியேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும்.

கட்சி, சாதி, மத பேதங்களை கடந்து தமிழின உணர்வாளர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் எதிர்வரும் 8ஆம் திகதி அணி திரள வேண்டும் என இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு தின கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. அன்றைய தினம் ஈழத் தமிழர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட துயரங்கள் ஆவணப்படமாக திரையிடப்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக