4 ஜூலை, 2011

இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

இந்திய, இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நிறைவடைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன் போது இந்திய இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு கல்வி சம்பந்தமான பயிற்சிகளை அதிகளவில் வழங்குதல், கலகத் தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டன.

இதனைத் தவிர இலங்கை இராணுவத்தினருக்கு பல பயிற்சித் திட்டங்களையும் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் மனிதாபிமான பயிற்சிகளும் உள்ளடங்கும். ஆங்கிலப் பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையிலும் இந்தியா, இலங்கை இராணுவத்துக்கு உதவவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக