4 ஜூலை, 2011

முச்சக்கர வண்டியில் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்

முச்சக்கரவண்டியில் இனிமேல் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லமுடியும் என்பதுடன் நான்கு பயணிகளுக்கு மேலதிகமாக ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து பொலிஸினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில்,

முச்சக்கரவண்டியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வது சட்டவிரோதமானது. அந்த விதியை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். முச்சக்கரவண்டிகள் வீதிவிபத்துகளில் சிக்கிக்கொள்வதற்கு இதுவே பிரதான காரணமாகும்.

முச்சக்கரவண்டியில் அதிகபட்சமாக நான்குபேரை மாத்திரமே ஏற்றிச்செல்லவேண்டும் இதுவே பாதுகாப்பானது. அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக