8 ஜூன், 2011

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதிலை இன்னமும் எதிர்பார்த்துள்ளேன்: மூன்



ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை தான் இன்னும் எதிர்பார்த்திருப்பதாகவும் பொறுப்புக்கூறுதல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பதிலை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அவர்கள் பதிலை விரைவாக அனுப்பினால் அதனடிப்படையில் நான் புதிய விடயங்களை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் கடந்த திங்கட்கிழமை நியுயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பான் கீ. மூன் கூறியுள்ளார்.

இதேவேளை நான் ஆசிய குழுவை சந்தித்ததாகவும் தான் இரண்டாம் தடவையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்படுவதற்கு அவர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளில் அதிகமானவை இலங்கை அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைளாகும் என்றும் தெரிவித்துள்ள அவர் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்காக நான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக