17 நவம்பர், 2011

நோர்வே அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே நிலைப்பாட்டை அறிவிக்கலாம்: ஐ.தே.க.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் தோல்வி தொடர்பில் நோர்வேயில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே அது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை தொடர்பில் நோர்வேயில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் விபரிக்கையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக