5 ஜூலை, 2011

அதிகளவு உள்ளூராட்சி மன்றங்களை யாழ்ப்பாணத்தில் கைப்பற்ற முடியும்: சுசில்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் செயற்பட்டுவருகின்றனர் என்று முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிரே ம்ஜயந்த தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர்கள் குழுவினர் விஜயம் மேற்கொண்டமை மற்றும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தியமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் : யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை அங்கு விஜயம் செய்தோம்.

எமது கூட்டணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். எமக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டோம்.

இந்நிலையில் வடக்கில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் நாங்கள் பிரசார பணிகளை மேற்கொள்வோம். அதிகளவான வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக