5 ஜூலை, 2011

7 வயது சிறுவன் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை: பெற்றோர் கைது

ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவனை இரவு முழுவதும் தனியறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் வேயாங்கொடை பொலிஸாரினால் அந்த சிறுவன் மீட்கப்பட்ட சம்பவமொன்று சப்புகஸ்தென்னை, கலகெடிஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுவனை கொடுமைப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அவனது தாயாரும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேயாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனைகளை நடத்தியபோது வீட்டின் அறையொன்றில் 7 வயது சிறுவன் ஒருவன் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவனது முதுகிலும் நெஞ்சுப் பகுதியிலும் சிறு காயங்களும் ஏற்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் கர்ப்பிணித் தாயார் (சங்கீத ஆசிரியை)மற்றும் அவனது தந்தை (ஆங்கில ஆசிரியர்) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சிறுவன் வீட்டில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காகவே இவ்வாறு தண்டிக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட தந்தை சிறுவனின் உண்மையான தந்தையல்ல என்பதும் தெரியவந்திருப்பதாக வேயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக