5 ஜூலை, 2011

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியா தலையிடும்: பொன்சேகா


நான் கூறியதைப் போல கிழக்கில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியாவின் தலையீட்டை தடுக்கமுடியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளே கொள்ளை யிட்டுள்ளனர்.

அதேபோல எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் அவர் சொன்னார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல் அட்பார் முறையில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோதும். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டவேளையில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், நான் கூறியதை போலவே கிழக்கில் பயங்கரவாதம் தலைத்தூக்கிவிட்டது. கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளை கொள்ளையிட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மன்றை விட்டுவெளியேறுகையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அம்மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டால் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் எமது பிரச்சினையில் தலையிடும். அதற்கு இடமளிக்கமுடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக