3 ஜூலை, 2011

பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவால் கனேடிய தமிழர் ஒருவர் சித்திரவதை

கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக "த நெசனல் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம் வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத் தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மிகமோசமான முறையில் இலங்கை யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம், அதன் மேல் சுமத் தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறது. எனினும் அந்த நாட்டின் சிறைகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கு தாம் ஒரு சாட்சி என்று மனேஜ்குமார் குறிப் பிட்டுள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகின்றனர்.

அத்துடன் பணம் பறிப்பதற்காக எப்போதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் 50 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப் பட்டு வருகிறார்கள் என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக