16 ஜூன், 2011

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நால்வர் கனடாவில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் 76 பேரை கப்பல் மூலம் கனடாவுக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கனடா, டொரன்டோ நகரில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணுராஜ தேவராஜ் (வயது 33), அந்தோனிமுத்து (வயது 33), கந்தசாமி (வயது 39) மற்றும் ஜெயசந்திரன் கனகராஜ் (வயது 32) ஆகியோரே கனேடிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத காலப்பகுதியில் ஓசன் லேடி என்ற கப்பல் மூலம் மேற்படி இலங்கையர்கள் 76 பேரையும் சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக