16 ஜூன், 2011

பாராளுமன்றத் தெரிவுக் குழுவானது சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடவே: யோகராஜன்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடும் நோக்கிலானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரவிக்கையில், அரசாங்கம் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ள. இவ்விடயத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கின்றது. எனினும் இந்தத் தெரிவுக்குழுவில் பயனில்லை என்பதே எமது தனிப்பட்ட நிலைப்பாடு என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக