16 ஜூன், 2011

புனர்வாழ்வு நிலையங்களில் தற்போது 3ஆயிரத்து 497 பேர் மாத்திரமே உள்ளனர்: சுதந்த ரணசிங்க




தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவாயிரத்து 497 பேர் மாத்திரமே தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கான தொழிற்பயிற்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வுவனியாவில் ஐந்து புனர்வாழ்வு நிலையத்திலும் பொலன்நறுவையில் இரண்டு நிலையங்களிலும் 106 முன்னாள் பெண் போராளிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக