18 ஜூன், 2011

வஞ்சனை எண்ணம் கொண்ட வஞ்சப்புலிகளின் அரக்கத்தனமாக சகோதரபடுகொலை




நடைபெற்ற காலம் நாம் அறிவோம் மதம் இனவேறுபாடு இன்றி அப்பாவி பொது மக்கள் புத்திமான்கள் அறிவுயீவிகள் இலங்கை இந்திய அரசியல் தலைவர்கள் சகோதர அமைப்புக்களின் தலைவர்கள் சிறீசபாரத்தினம் தோழர் பத்மநாபா தோழர் றொபேட் புலிகள் புரிந்த படுகொலைகளை எத்தனை எத்தனை எண்ணிக்கொண்டே போகலாம் பாசிசத்தில் தலைகளிலே அன்று ஆணவம் குடிகொண்டது அதனால் என்னவோ இந்த கொடுமையான கொலைகள் நமது மண்ணிலே இடம்பெற்றது புலிகளின் இந்த காட்டுமிராண்டி தனமான செயலுக்கு வெளிநாட்டு புலம்பெயர் வாழ் தமிழர்களும் கண்திறந்து ஆதரவு வழங்கினர் காரணம் தங்களின் வெளிநாட்டு சுகபோக வாழ்வு பறிபோய்விடுமென்று புலிகளை ஏவிவிட்டு கொலைகளை நாடாத்தி அதில் குளிர்காய்ந்து ரசித்து மகிழ்ந்தனர் ஈழத்தில் வாழும் மக்கள் மனங்களை நாங்கள் அறிவோம் புலிகள் அழிந்த நிலமையிலும் ஈழத்தில் இன்னல் பட்டு இடர்களை அனுபவித்து வாழும் அப்பாவி மக்களை அடகு வைத்து வாழும் புலம்பெயர் புலிப்பினாமிகள் தங்கள் எண்ணங்களை மாற்றிகொள்ளவேண்டுமென்பதே எங்களது ஆவல்
பழிவாங்கும் எண்ணம் நமக்கு இல்லை
பண்பான எண்ணமே நமக்கு உண்டு....
புலிகளின் பாசிச எண்ணத்திற்கு பலியான பொது மக்கள் சகதோழர்கள் போராளிகள் அனைவருக்கும் எங்களது இதய அஞ்சலிகளுடன் இக்கவிதை தனை அவர்களின் ஆத்மா சாந்தியடைய சமர்ப்பிக்கின்றோம்



நாபா எனும் மனிதநேயம் என்றென்றும் நம்முடனே!!!!!!!


நட்பு சக்திக்கு வலுசேர்த்த
நடுநிலை நாயகன்--எங்கள் தோழன் நாபா
நறுமணம் கொண்ட அரசியல் தந்து எங்களை
நடமாட வைத்தவர் எங்கள் தோழன் நாபா

நாணயமற்ற மனிதரையும் அணைத்து அவர்
நாணம் அடையசெய்தவர்--எங்கள் தோழன் நாபா
நப்பாசைகளை சுமந்த நெஞ்சங்களையும்
நல் நெஞ்சம் கொண்டு முத்தமிட்டவர் தோழன் நாபா

நல்லெண்ணம் தனை சுமந்து நமக்கு
நல் திசைகாட்டி கல்லாக--எங்கள் தோழன் நாபா
நலிவடைந்த நம் மக்களுக்காக அன்று
நச்சுப்பாம்புடனும் கைகோர்த்தவர் தோழன் நாபா

அதிகாரமின்றி நம்மிடையே அன்னியனிடம்
அகராதியொன்றை அகலமுனைந்தவர்--எங்கள் தோழன் நாபா
அகன்ற நல்மனதால் தோழையுடன் நம்மவரை
அகந்தையின்றி ஆழநினைத்தவர் தோழன் நாபா

அகமும் புறமும் அன்றும் என்றும்
அகிம்சைதனைபோதித்தவர் எங்கள் தோழன் நாபா
அக்கறை கொண்டு அப்பாவி மக்களை
அக்கரை சேர்க்க புறப்பட்டவர்தோழன் நாபா

அன்புக்கு அதிபதியாக என்றென்றும்
அகிலம் போற்ற வாழ்ந்து காட்டியவர் எங்கள் தோழன் நாபா
அங்கீகாரம் தனை வேண்டி மக்களுக்காக
அச்சமின்றி களம் புகுந்தவர்தோழர் நாபா

அவலம் நிறைந்த வாழ்வை அனுபவித்த நமக்காக
அகம்தனில் உதித்த ஆசைதனை துறந்தவர் எங்கள் தோழன் நாபா
அச்சங்கள் மீது பக்தி கொண்டவர் அல்ல--தோழன் நாபா
அகிம்சை மீது மோகம் கொண்டவர் தோழர் நாபா
அரக்கனையும் அன்பாய் அரணைக்கும்
அதிவாய்ந்த சக்தி தாங்கியவர் எங்கள் தோழர் நாபா

உண்மைகளை மறைத்து ஊமையாக
உலகவலம் வந்தவர் அல்ல எங்கள் தோழர் நாபா
உண்மைகளை உண்மையென்று
உலகிற்கு பறைசற்றியவர் தோழர் நாபா

உதிரக்கரத்தினால் உரிமைகளை வென்றெடுக்கமுடியாது
உடனிருந்தோர்க்கு உரிமையுடன் கூறியவர் எங்கள் தோழர் நாபா
உயிரோட்டமாக எங்கள் மனங்களில் என்றென்றும்
உவகையுடன் வாழ்பவர் ஒருவர் தோழர் நாபா

உத்தமனாக உண்மையாளனாக மக்கள் மனதில்
உலாவரும் தியாகசுடர் எங்கள் தோழர் நாபா
உச்சம் தலையில் முத்தமிட்டு எங்களை
உயிர்மெய் எழுத்தை உடனழிருந்து காட்டியவர் தோழர் நாபா

கடமை தனில் கண்ணியவாளன் தோழன் பத்மநாபா
கர்வமில் கனிமொழி தந்தவர் தோழன் பத்மநாபா
கர்மம் தனை கண்களில் சுமந்தவர் தோழன் பத்மநாபா
கர்ணன் போல் கொடை வள்ளல் தோழன் பத்மநாபா
கயவனையும் மன்னிக்கும் மனம் படைத்தவர் தோழன் பத்மநாபா
கசப்பு தன்மையில்லாத சகிப்பு தன்மை தந்தவர் தோழன் பத்மநாபா

அனைத்து தியாகிகளுக்கும் பொது மக்களுக்கும் எமது இதய அஞ்சலிகள்
நன்றியுடன் தோழமையுடன் தோழர்கள்......சுவிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக