21 ஜூன், 2011

இலங்கைப் பணிப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவு: ஜோர்தான் ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர் கைது

ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இலங்கைப் பெண்களை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் அந்த ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்டானிலுள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களில் ஒன்றான கிளஸிக் குறூப் ஆடைத்தொழிற்சாலையில் இலங்கை பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் இந்நபர் இலங்கையரான அனில் சாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வல்லுறவுப் புகார்கள் குறித்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலக தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான நிறுவகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன்பின் அது தொடர்பான செய்திகள் உலகெங்கும் பல ஊடகங்களில் வெளியாகின.

அது தொடர்பாக புகார்கள் கிடைக்கவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் நலன்புரி அமைச்சு ஆரம்பத்தில் மறுத்திருந்த போதிலும் அண்மையில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்துவதற்காக இருவர் கொண்ட குழுவொன்றை ஜோர்தானுக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக