21 ஜூன், 2011

செனல் 4 ஆவணப்படம் அரசியல் இலாபம் தேடும் சிலரால் தயாரிக்கப்பட்டது : பீரிஸ்

செனல்4 ஆவணப்படமானது ஜனாதிபதி மகிந்தவின் குரல் சர்வதேசத்தில் ஒலிக்காமல் தடைசெய்வதற்காக அரசியல் இலாபம் தேடும் சிலரால் போலித்தனமாக தயாரிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை எற்படுத்த பலர் முயற்சித்து வருகிறார்கள். செனல்4 காணொளியும் அந்த முயற்சிகளின் ஓர் அங்கமேயாகும்.

சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு கௌரவமான பெயர் உண்டு. அதனை இல்லாமல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன' என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக