15 ஜூன், 2011

இன்று பொசன் பெளர்ணமி தினம்: அநுராதபுரம், மிஹிந்தலையில் வைபவங்கள்: 15 இலட்சம் பக்தர்கள் வருவரென எதிர்பார்ப்பு

பொசன் பெளர்ணமி தினம் இன்றாகும். இதனையிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 15 இலட்சம் பக்தர்கள் இன்று அநுராதபுரத்திற்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சுகாதார, குடிநீர், வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திஸாவெவ, நுவரவெவ ஆகிய இரு குளங்களிலும் குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது. எனினும் பசவக்குளம், கும்பிச்சான்குளம், கனதராவ ஆகிய குளங்களில் நீராட முடியும்.

மேற்குறிப்பிட்ட குளங்களில் நீராடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராடுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இப் பகுதியில் அவசர உயிர்காப்பு பிரிவினரும் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், நகர், மிஹிந்தலை, அநுராதபுரம் புனித நகர் பகுதிகள் உட்பட போக்குவரத்து பாதுகாப்புக்கென சுமார் 4000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தம்புள்ள வீதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவதற்கும், புத்தளம் வீதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவதற்குமாக வெவ்வேறு வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திஸாவெவ, நுவரவெவ ஆகிய குளங்களிலிருந்து குடிப்பதற்காக நீர் எடுப்பதால் நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நகர சபையினர் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நகருக்குள் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக