20 ஜூன், 2011

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்: ராஜித

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவது குறித்தும் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசியல் தீர்வு குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீள் குடியேற்றம் மற்றும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறெனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் தீர்வு ஒன்று அவசியமாகும். அதனை வழங்கியாக வேண்டும். அந்தவகையில் அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதனைத்தான் நான் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றேன் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக