20 ஜூன், 2011

2 கோடி ரூபா வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்படவிருந்த இந்த பணத் தொகையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் நாணயத்தாள்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறிதொரு குழுவினரின் தேவைக்காக இந்தப் பணத்தொகை விமானம் மூலம் கொண்டு செல்லப்படவிருந்ததாக சுங்க அதிகாரிகளின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக