7 மே, 2011

ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுக்கள் அடிப்படைத் தன்மையற்றவையாகும்: ஜகத் ஜய சூரிய

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்றதாக கூறி ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் அடிப்படைத் தன்மையற்றவையாகும்.

இத னை அப்போதைய வன்னிக் கட்டளைத் தள பதி என்ற வகையில் மிகவும் பொறுப்பு டனேயே கூறுகின்றேன் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜய சூரிய குறிப்பிட்டார். இலங்கைக்கு அபகீர் த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற் படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால நடவடிக்கைளிலும் இராணுவம் நல்லொழுக்கத்துடனேயே செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு பாதுகாப்பு கட்டளை தலைமையகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இராணுத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அங்கு படையினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முன் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். இந்த நிபுணர் குழு தற்போது இலங்கையில் போர் குற்றங்களும் பாரிய மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளதாக கூறி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரதிகள் தற்போது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன.

இதனால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டு கால பயங்கரவாதத்தை கையாண்டு வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தோம். இன்று நாட்டில் சமாதானம் பிறந்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையிலே இலங்கைக்கு எதிராக போர்க் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தின் இறுதி காலப் பகுதியில் வன்னி கட்டளைத் தளபதியாக நான் செயற்பட்டேன். இங்கு நடந்த சம்பவங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் போது போர் குற்ற செயல்கள் இடம்பெறவில்லை.

பக்கச் சார்பான போலி ஆதாரங்களினால் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படைத் தன்மையற்றது என்றே கூற வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட இராணுவத்தை அவமதிக்கும் செயலாகவே நிபுணர் குழுவின் அறிக்கை காணப்படுகிறது.

எனவே இராணுவ வீரர்கள் மிகவும் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். கடந்த வெள்ள அனர்த்தங்களின் போது பொது மக்களை மீட்டெடுத்து மிகவும் பொறுப்புணர்வுடன் நிவாரண பணிகளுக்கு உதவினீர்கள் இவ்வாறான சேவையை நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக