1 மார்ச், 2011

இலங்கை - இந்திய மீனவ செயற்குழு அமைக்கத் திட்டம் பொதுவான இணக்கப்பாட்டிற்கு நடவடிக்கை

மீனவர் விவகாரத்திற்குத் தீர்வொன்றை எட்டும்நோக்கில் இரு நாட்டு மீனவர் களையும் உள்ளடக்கிய இணைந்த செயற்குழுவொன்று அமைக்கப்படவிருப்ப தாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்து இரு நாடு களும் இணைந்து பொதுவான இணக்கப் பாடொன்றுக்கு வரும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பு மீனவர்கள் சார்பிலும் பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவார்க ள் எனப் பிரதியமைச்சர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மீனவர் விவகாரத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இந்த இணைந்த செயற்குழு பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் குழு வொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ், தமிழகத்தின் பிரதம செய லாளர், இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் தமிழகப் பணிப்பாளர், இந்திய பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மற்றும் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டமொன்று நேற்றுமுன்தினம் நடை பெற்றது.

இக்கூட்டத்திலேயே மீனவர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பு வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீனவர் விவகாரத்தில் பொது இணக் கப்பாட்டை எட்டுவதற்கு இணைந்த செயற் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானமும் இக்கூட்டத்தில் வரவேற்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறி வித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக