1 மார்ச், 2011

லிபியாவிலிருந்து அழைத்து வந்த 15 இலங்கையர் கிறிஸ்சில் மாயம்


லிபியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கிரிஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 15 இலங்கையர்கள் கிறிஸ்சில் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது. இவர்களில் 5 பேர் கிஹஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீன நாட்டு ஊழியர்கள் சிலருடன் 36 இலங்கையர்கள் கிஹஸணுக்கு அழைத்து வரப்பட்டனர். பணியகத்தினூடாக இவர்களை திருப்பி அழைத்துவர டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 15 பேர் தாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதோடு இலங்கையரை நாட்டுக்கு திருப்பி அழைத்து வருவதற்கு வேறுநாடுகளின் உதவியை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையர் கிஹஸணுக்கு நுழைவதற்கு அனுமதி வழங்காதிருக்க அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 10 இலங்கையர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக