20 பிப்ரவரி, 2011

ஜே.வி.பி. வேட்பாளர்கள் மீது தாக்குதல் எம்பிலிப்பிட்டிய, கண்டியில் சம்பவம்


எம்பிலிப்பிட்டிய மற்றும் கண்டியைச் சேர்ந்த ஜே.பி.பி. வேட்பாளர்கள் மீது கடும் தாக்குதல் கள் நடத்தப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் எம்பிலிப்பிட்டிய நகர சபைக்கான தேர்தல் குழுத் தலைவரும், முன்னாள் நகரசபை உறுப் பினருமான ஜீ.எஸ்.கே. வெதகொட மீது இனந் தெரியாதோர் கடும் தாக்குதல் மேற்கொண்டுள் ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கண்டி மாவட்டத்தின் கோரளே பிரதேச சபைக்கு போட்டியிடும் ஜே.வி.பி.யின் இரு வேட்பாளர்களான கபில அபேரத்ன மீதும் சுனில் பண்டார என்பவர் மீதும் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையிலேயே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இவர்களைப் பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு அரசியல் கட்சியின் ஆதரவாளர் கள் இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக் கிளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இவர்களிடம் இருந்த 7500 ரூபாவினையும் பறித்துள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த வேட்பாளரான கபில அபேரத்ன தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுதொடர்பாக 119க்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வும் ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு தெரிவிக் கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக