14 பிப்ரவரி, 2011

தப்பியோடிய இராணுவத்தினரில் இதுவரை 4ஆயிரத்து 630 பேர் கைது


இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் இதுவரையில் 4ஆயிரத்து 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 12 அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவப்பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்தார்.

தப்பியோடிய இராணுவ வீரர்களில் 4ஆயிரத்து 816 பேர் இதுவரையில் சரணடைந்துள்ளதுடன் அவர்களில் 11 அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கும் அவர் தப்பியோடியவர்களுக்கான சரணடையும் காலம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் இராணுவ வீரர்களை சரணடையுமாறு நாம் அறிவித்திருந்தோம், அத்தோடு அதற்கான காலக்கெடுவும் விடுத்திருந்தோம். அதனடிப்படையிலேயே பெருந்தொகையினர் சரணடைந்துள்ளார்கள்.

இவ்வாறு சரணடைவதற்காக கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. எனவே இதுவரையிலும் சரணடையாமல் உள்ள தப்பியோடியவர்களையும் கைது செய்யவுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக