27 ஜனவரி, 2011

வவுனியா மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்


வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெங்கல செட்டிகுளம் ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நேற்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன்; வவுனியா மாவட்ட தேர்தல்கள் காரியாலயத்தில் கையளித்தார்.

இவருடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் நகரபிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் டேவிட் நாதன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக