27 ஜனவரி, 2011

யாழில் தேர்தல் ஜனநாயக முறையில் இடம்பெறுமா?: சந்திரசேகரன்



யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலைக் முன்னணியின் உறுப்பினர் சந்திரசேகரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஜே.வி.பி இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது. இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் தற்போது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே ஜனநாயக முறையிலான தேர்தல் இடம்பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் ஒரு மாற்றம் ஏற்பட தற்போது நடைபெறும் இந்த சிறிய தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக